Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அராவ் பள்ளி மாணவர்களை முத்தமிட்ட வெளிநாட்டு நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

அராவ் பள்ளி மாணவர்களை முத்தமிட்ட வெளிநாட்டு நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

பெர்லிஸ் மாநிலம் அராவ் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை முத்தமிட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து அராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் மொஹ்சின் ரோடி வெளியிட்டுள்ள தகவலில், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து இன்று பிற்பகல் 1 மணியளவில் போலீஸ் புகாரைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது, சந்தேக நபர் பள்ளியின் பின்பக்க வாயில் வழியாக வளாகத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலாட் பயிற்சி ஆசிரியர் கண்டுள்ளார்.

பின்னர், அந்த சந்தேக நபர், மாணவர்கள் சிலாட் பயிற்சி மேற்கொண்டிருந்த மைதானத்துக்குச் சென்று, அங்கு இருந்த சில ஆண் மாணவர்களை பிடித்து தூக்கி முத்தமிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெர்லிஸ் போலீசார் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஆடவரைத் தேடி வருகின்றனர்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு