Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வேட்டைத் துப்பாக்கியால் ஆடவர் சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வேட்டைத் துப்பாக்கியால் ஆடவர் சுடப்பட்டார்

Share:

பத்து காஜா,அக்டோபர் 05-

செம்பனைத் தோட்டம் ஒன்றில் செம்பனைக் குலைகளை திருடியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், வேட்டைத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். காலில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணியளவில் பேரா, செலமா, கம்போங் சம்பிட் பெராஸ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், யார் என்பது தெரியவில்லை. சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாகி விட்டார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ்தெரிவித்தார்.

ஓரிட மக்கள் சேகரித்து வைத்திருந்த செம்பனைக்குலைகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த ஆடவர், போதைப்பொருள் மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அந்த நபர் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட போது, அவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று டத்தோ அசிசி மேட் அரிஸ் விளக்கினார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி