Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் பத்தாங் காலி – கெந்திங் சாலை திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜாலான் பத்தாங் காலி – கெந்திங் சாலை திறக்கப்பட்டது

Share:

ஹுலு சிலாங்கூர், ஜூலை 1-

31 பேர் உயிருடன் புதையுண்ட ஜாலான் படாங் காளி நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக மூடப்பட்டு இருந்த ஜாலான் படாங் காளி –கெந்திங் சாலையின் B66 ஆவது வழித்தடம், இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இதனை உலு சிலாங்கூர் பொதுப்பணி இலாகா தனது முகநூலில் அறிவித்துள்ளது.

இன்று 3 மணிக்கு பிறகு அனைத்து வகையான வாகனங்களும் அந்த சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜாலான் படாங் காளி –கெந்திங் சாலையில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் அங்குள்ள Father's Organic Farm என்ற இடத்தில் முகாமிட்டு இருந்த 92 பேரில் 31 பேர் உயிரிழந்த வேளையில் 61 பேர் உயிரித் தப்பினர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, 5 ஆவது மைல்,ஜாலான் பத்து, முன் ச்ஹோங் சீனப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவார்.

Related News