ஆசியான் - வளைகுடா ஒத்துழைப்பு மீதான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரியாத் சென்றடைந்தார். பிரதமரை ஏற்றிச்சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8.15 மணியளவில் மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பிரதமர் அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவினரை விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதீர், சவூதி அரேபியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ வான் ஸைடி வான் அப்துல்லா மற்றும் இரு வழி உறவுகளுக்கான தலைமை துணை செயலாளர் டத்தோ நோர்மான் அகமட் ஆகியோர் வரவேற்றனர்.
ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








