Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் நடந்த வன்முறைத் தாக்குதல்: அன்வார் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நடந்த வன்முறைத் தாக்குதல்: அன்வார் கடும் கண்டனம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் நேற்று மர்ம நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதம் அல்லது இனத்தின் பெயரால் அப்பாவி மக்களைக் குறி வைத்து மேற்கொள்ளப்படும் இது போன்ற தாக்குதல்களில், எந்த ஒரு நியாயமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அன்வார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இந்தக் கடினமான சூழலில், ஆஸ்திரேலிய மக்களுடனும் அரசாங்கத்துடனும் மலேசியா துணை நிற்பதாகவும், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்