சிரம்பான், மார்ச்.15-
நெகிரி செம்பிலான், சிரம்பான் 2-வில் உள்ள AEON பேரங்காடிக் கிளையில் 2026-ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் காலத்திற்கான உச்ச வரம்பு விலைத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விலைக்கட்டுப்பாட்டுத் திட்டம் மார்ச் 14 முதல் மார்ச் 28 வரை என மொத்தம் 15 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும் என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பிருமான வீரப்பன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

பயன்பாட்டில் இருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் வெங்காயம், இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்ட மொத்தம் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விதிமுறைகளை மீறி அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு 2011-ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாட்டு, ஆதாய மீட்டல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். விலை உயர்வு அல்லது விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








