கோலாலம்பூர், மார்ச்.15-
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டும் மலேசியாவில் 1,459 போலி முதலீட்டு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் சுமார் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்திருப்பதாகவும் புக்கிட் அமான் வணிகக் குற்ற விசாரணைத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாகக் கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடும் முன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமத்தை நிதி அதிகாரிகளிடம் சரி பார்க்குமாறும், அடையாளம் தெரியாத தனிநபர் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








