சட்டமன்ற தேர்தல் வாயிலாக நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுவது ஒரு மிரட்டல் அல்ல என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைப்புடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப் படுத்துவதிலும், மக்களின் நலன் சார்ந்த அம்சங்களிலும், தீவிர கவனம் செலுத்தி வருவதால், இது போன்ற மிரட்டல், ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று உள்துறை அமைச்சருமான சைப்புடின் நசுதியோன் விளக்கினார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மத்திய அரசாங்கத்தை வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 6 மாநிலங்களின் அரசுகளை எதிர்கட்சிகள் கைப்பற்றுவது மூலம், மத்திய அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று எதிர்கட்சிகள் மனப்பால் குடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


