Mar 11, 2026
Thisaigal NewsYouTube
புதிய தடயங்கள் கிடைத்துள்ளன
தற்போதைய செய்திகள்

புதிய தடயங்கள் கிடைத்துள்ளன

Share:

சிலாங்கூர், தாமான் கின்ராராவில் உள்ள சமூக ஆர்வலர் எஸ். சந்திரசேகரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் போலீசாருக்கு புதிய தடயங்கள் கிடைத்துள்ளன.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே அவை என்ன என்பதைத் தற்போதைக்குக் கூற இயலாது சிலாங்கூர் காவல் துறை தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

சிக்கூ சந்திரா என்று அழைக்கப்படும் சந்திரசேகரனுக்குச் சொந்தமான மூன்று கார்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதாக முன்னதாக சமூக ஊடகங்களில் வீடியோ பரவியிருந்தது.

இந்நிலையில் பூச்சோங்கில் உள்ள அவரது வீட்டையும் குழுவினர் தாக்கியதாகவும், அவரது வாகனங்கள் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுளன.

இவ்வேளையில் இச்சம்பவங்களுக்கான நோக்கத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணவும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ஷாசெலி கூறினார்.

Related News