Feb 2, 2026
Thisaigal NewsYouTube
தாவாவில்  தீ விபத்து: 40 வீடுகள் சாம்பல்
தற்போதைய செய்திகள்

தாவாவில் தீ விபத்து: 40 வீடுகள் சாம்பல்

Share:

தாவாவ், பிப்ரவரி.02-

இன்று திங்கட்கிழமை காலை தாவாவ், தவாவூ, கம்பங் திதிங்கான் பகுதியில் உள்ள Kampung Titingan தேசியப் பள்ளிக்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 வீடுகள் எரிந்து நாசமாகின.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தாவாவ் மண்டலத் தலைவர் Moilley Milin கூறுகையில், காலை 10:15 மணியளவில் தீ விபத்து குறித்த அழைப்பு வந்ததாகவும், 10:23 மணிக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றடைந்ததாகவும் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் திறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் தண்ணீர் லாரிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 12:03 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுவரை இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News