குளுவாங், ஜூன்.28-
மலேசியாவுக்கான NSM ஏற்றுமதி அனுமதியை நோர்வே அரசாங்கம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக கடற்படைத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்கக்கூடிய நான்கு நாடுகளின் முன்மொழிவுகளை மலேசியா பரிசீலித்து வருகின்றது.
இது குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் வெளியிட்டுள்ள தகவலில், மலேசியக் கடற்படைக் கப்பல்களுக்குப் பொருந்தக்கூடிய ஏவுகணை அமைப்பை தேர்வு செய்வதற்காக தொழில்நுட்பத்துடன் கூடிய செயல்திறன் அடிப்படையில் அமைச்சு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பரிசீலனையில் உள்ள நாடுகளில் சில ஐரோப்பாவைச் சேர்ந்தவை என்றும், அத்துடன் துருக்கி, தென் கொரியாவும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மதிப்பீட்டு நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்களை வெளியிட காலிட் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








