ஜோகூர் மாநிலத் தேர்தலில், பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் 'பார்ட்டி பெர்சாமா மலேசியா' வேட்பாளர்களாகப் போட்டியிடுவதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு இன்னும் வலுவாகவே உள்ளது என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றார். பெர்மாஸ் தொகுதியில் டாக்டர் ஜாமில் நஜ்வா, லார்க்கினில் நூர்சினா அபு, ஸ்துலாங்கில் ஸ்டான்லி டான் மற்றும் புத்ரி வங்சாவி் நிக்கோலஸ் பால் வின்சென்ட் ஆகியோர் பிகேஆர் பின்னணியைக் கொண்ட பெர்சாமா வேட்பாளர்களாவர்.
மேலும், வாக்குப்பதிவு விழுக்காட்டை அதிகரிக்க, வெளிமாநிலங்களில் வாழும் ஜோகூர் மக்கள் மற்றும் இளைஞர்களைப் சொந்த ஊர் திரும்பி வாக்களிக்குமாறு பிகேஆர் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








