பெசுட் கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை கணவாய் மீன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, 59 வயதுடைய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்தார். டுங்குன், ஜெரங்காவ் பகுதியைச் சேர்ந்த அவர், அதிகாலை 1.16 மணியளவில் படகில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவருடன் இருந்த நண்பர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரொஸாய்மி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
பெசுட் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.








