புத்தாத்தான், நவ. 19-
ரயிலினால் மோதப்பட்ட மாது ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் 11 வயது மகன் கடும் காயங்களுக்கு ஆளாகினான். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சபா, புத்தாத்தான், கம்பபோங் பெதாகாஸ் அருகில் ரயில் இருப்புப்பாதையில் நிகழ்ந்தது.
தனது மகனை அழைத்துக்கொண்டு ரயில் இருப்புப்பாதையை கடக்க 41 வயது மாது முயற்சித்த வேளையில் இவ்விபத்து நிகழ்ந்தது.
மாது சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவரின் 11 வயது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.








