கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலாங்கூர், அம்பாங் ஜெயாவில் உள்ள பண்டான் இண்டா உணவகத்தின் முன்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பில் போலீசார் இதுவரையில் 8 பேரை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 19 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 8 பேரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
உணவகத்தின் முன் போடப்பட்டுள்ள நாற்காலி, மேஜைகளை தூக்கி எறிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட இச்சம்பவத்தினால் உணவகத்தில் இருந்த பொது மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இது தொடர்பான வீடியோ காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


