Jan 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையே கைகலப்பு 8 பேர் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையே கைகலப்பு 8 பேர் கைது

Share:

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலாங்கூர், அம்பாங் ஜெயாவில் உள்ள பண்டான் இண்டா உணவகத்தின் முன்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் 8 பேரை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 19 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 8 பேரும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அம்பா​ங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

உணவகத்தின் முன் போடப்பட்டுள்ள நாற்காலி, மேஜைகளை ​தூக்கி எறிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட இச்சம்பவத்தினால் உணவகத்தில் இருந்த பொது மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இது தொடர்பான வீடியோ காணொளிகள் ச​​மூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Related News