May 28, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

ஒரு கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்.08-

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது மூலம் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் சிறைச்சாலையிலிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட ஆடவர் ஒருவரும், அவரின் காதலியும் பிடிபட்டது மூலம் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் அந்த ஆணும், பெண்ணும் தந்த தகவலின் பேரில் பெரியளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த போதைப் பொருள் சிங்கப்பூர், இந்தோனேசியா சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருந்ததாக நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இடைக்கால இயக்குநர் மாட் ஸானி முகமட் சாலாஹூடின் தெரிவித்தார்.

முதல் சோதனை, மாலை 5.35 மணியளவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் போது 28 வயது மதிக்கத்தக்க காதல் ஜோடி கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது சோதனை மாலை 6.15 மணியளவில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மாட் ஸானி இதனைத் தெரிவித்தார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்