நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள், நில விவகாரம் தொடர்பில் பிரச்னைகளை கொண்டு இருக்குமானால் முதலில் மலேசிய இந்து சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு ஆலயப் பொறுப்பாளர்களுக்கு ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார்.
மலேசிய இந்து சங்கத்திற்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்வது மூலமே அவர்கள் தமது ஒற்றுமைத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வர இயலும். இதன் மூலம் பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூகமாக தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக துணை அமைச்சர் சரஸ்வதி குறிப்பிட்டார்.
கோயிலை அகற்ற வேண்டும் அல்லது இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்படுமானால் ஆலயப் பொறுப்பாளர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டியது மலேசிய இந்து சங்கமாகும் என்று சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.








