Apr 10, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட் விபத்து: லாரி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தது அபாட்
தற்போதைய செய்திகள்

சிகாமட் விபத்து: லாரி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்தது அபாட்

Share:

ஜோகூர், சிகாமட்டில் மூன்று இந்தியர்களின் உயிரைப் பலிவாங்கிய கோர விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட டிரெய்லர் லாரி நிறுவனத்தின் உரிமத்தை நிலப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான APAD ரத்து செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில், தம்பதியினரான 71 வயது கே. மாயகிருஷ்ணன், 65 வயது எஸ். செவந்தை மற்றும் செவந்தையின் சகோதரரான 77 வயது எஸ். பழனியாண்டி ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் வேனில் பயணம் செய்த மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

விசாரணையில், 'எம்.எஃப்.ஜி பரோக்கா என்டர்பிரைஸ்' நிறுவனம் வாகனப் பராமரிப்பில் அலட்சியமாக இருந்ததும், ஓட்டுநர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியதும் கண்டறியப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தின் லாரிகள் ஏற்கனவே பலமுறை வேக வரம்பை மீறி போக்குவரத்து விதிகளை மீறியதும் தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால், 2010-ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய அபாட் (APAD) குழு நேற்று முடிவெடுத்தது.

Related News

5 லட்சம் ரிங்கிட் ஊழல் புகார்: சிக்கிய முன்னாள் பொருளாதார அமைச்சர்! அதிரடியில் இறங்கிய SPRM

5 லட்சம் ரிங்கிட் ஊழல் புகார்: சிக்கிய முன்னாள் பொருளாதார அமைச்சர்! அதிரடியில் இறங்கிய SPRM

 அரசு நிலத்தில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலம் அகற்றம்: உரிமையாளர்கள் ஒத்துழைப்பு

அரசு நிலத்தில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலம் அகற்றம்: உரிமையாளர்கள் ஒத்துழைப்பு

44 லட்சம் ரிங்கிட் கொள்ளைச் சம்பவம்: மூளையாகச் செயல்பட்ட உயர் போலீஸ் அதிகாரி கைது

44 லட்சம் ரிங்கிட் கொள்ளைச் சம்பவம்: மூளையாகச் செயல்பட்ட உயர் போலீஸ் அதிகாரி கைது

எரிபொருள் மானியம் 600 கோடி ரிங்கிட்டாக உயர்வு: இரண்டாம் நிதியமைச்சர் தகவல்

எரிபொருள் மானியம் 600 கோடி ரிங்கிட்டாக உயர்வு: இரண்டாம் நிதியமைச்சர் தகவல்

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாஷிம் காலமானார்

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாஷிம் காலமானார்

கோலாலம்பூர்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிகாலையிலேயே எழும்புங்கள்; அரசாங்கம் புதிய முயற்சி தொடக்கம்

கோலாலம்பூர்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அதிகாலையிலேயே எழும்புங்கள்; அரசாங்கம் புதிய முயற்சி தொடக்கம்