Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லோரி நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து
தற்போதைய செய்திகள்

லோரி நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து

Share:

கோலாலம்பூர், மே.30-

கடந்த மே 13 ஆம் தேதி தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் எப்ஃஆர்யூ பிரிவைச் சேர்ந்த 9 போலீஸ்காரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமான கற்களை ஏற்றி வந்த லோரி நிறுவனத்தின் போக்குவரத்து லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

தஷ்வீன் டிரேடிங் என்ற அந்த நிறுவனத்தின் போக்குவரத்து லைசென்ஸ் நேற்று மே 29 ஆம் தேதி முதல் உனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தரைப் போக்குவரத்து அமலாக்கத் துறையான அபாட் அறிவித்துள்ளது.

அந்த நிறுவனம் போக்குவரத்து விதிமுறைகள் நிபந்தனையைப் பூர்த்திச் செய்யத் தவறிவிட்டதாக அபாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News