Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டின் எதிரொலி: நீதிபதிகளின் பாதுகாப்பினை வலுப்படுத்த நீதித்துறைக்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டின் எதிரொலி: நீதிபதிகளின் பாதுகாப்பினை வலுப்படுத்த நீதித்துறைக்கு கோரிக்கை

Share:

மலேசியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 150 பேரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைய நடைமுறைகள் நீதிபதிகளை மிரட்டல், தொந்தரவு மற்றும் தாக்குதல் அபாயங்களுக்கு உள்ளாக்குவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் சலீம் பஷீர் கூறுகையில், நீதிபதிகளின் பாதுகாப்பில் எந்தவொரு குறைபாடு ஏற்பட்டாலும் அது அவர்களின் தீர்ப்பளிக்கும் சுதந்திரத்தையே பாதிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் மேலாண்மை முறைகள் மிக அவசியமானவை என்றும், விரிவான பின்னணி சோதனைகள் மற்றும் அபாய மதிப்பீடுகள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீதிபதிகளின் ஓட்டுநர் நியமனத்தை மையப்படுத்தி, அதை அரசு அலுவலகம் அல்லது தகுதியான தனியார் நிறுவனங்கள் மூலம் தொழில்முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

சமீபத்தில் நீதிபதி ஒருவரின் முன்னாள் ஓட்டுநர் பணியில் இருந்த போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய சம்பவத்தை தொடர்ந்து இந்த விவாதம் எழுந்துள்ளது.

அந்நபர் குற்றம்சாட்டும் வகையில் அச்சுறுத்தல் செய்ததாகவும், மேலும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி