Jun 16, 2026
Thisaigal NewsYouTube
"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து
தற்போதைய செய்திகள்

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

Share:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து பெர்சாத்து கட்சியை யாராலும் விருப்பப்படி வெளியேற்ற முடியாது என்று பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் மர்சுகி முகமது தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் நியமனக் கடிதங்களை வழங்கும் முழுமையான அதிகாரம் கூட்டணித் தலைவருக்கு இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனல் அரசியலமைப்பு, பிரிவு 7A-இன் படி, கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகளுக்கு எதிரான எந்த ஒழுங்கு நடவடிக்கையும் கூட்டணியின் தலைவர்கள் மன்றத்தின் ஒருமித்த ஒப்புதலுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்றும் மர்சுகி முகமது குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இதுபோன்ற விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அந்தத் தலைவர்கள் மன்றத்திற்கே இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எடுக்கப்படும் முடிவுகளில் தலைவர்களில் ஒருவர் உடன்படவில்லை என்றாலும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மர்சுகி முகமது தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு