Jun 16, 2026
Thisaigal NewsYouTube
திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலா திரெங்கானுவில் 13 வயது பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 30 வயது ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியரான அந்நபர், கடந்த ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில், கோலா திரெங்கானுவிலுள்ள தங்கும் விடுதியில் வைத்துத் அம்மாணவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவ்வழக்கானது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017, பிரிவு 14(a), 14(d) மற்றும் 15(b)-இன் கீழ், உடல் ரீதியான மற்றும் உடல் சாராத பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் சந்தேக நபர் வரும் ஜூன் 21-ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு