Jun 16, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

Share:

கடந்த ஆண்டு நடந்த தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, மலேசிய சிறைத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றவியல் சட்டம், பிரிவு 304(b)-இன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், மேலும் ஐந்து சிறைத்துறை பணியாளர்கள், உள்துறை ஒழுங்கு நடவடிக்கையை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சிறைத்துறையின் பொறுப்பு, நேர்மை மற்றும் சட்டத்தின் உயரிய நிலையை நிலைநிறுத்துவதில் தங்களது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சட்டத்தையோ அல்லது சேவை விதிமுறைகளையோ மீறியதாக நிரூபிக்கப்படும் எந்த நபரையும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், தாங்கள் பாதுகாக்கவோ? சமரசம் செய்யவோ? போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஒழுங்கீனம் மற்றும் சட்ட மீறல்களுக்கு எதிராக 'Zero Tolerance' கொள்கையை சிறைத்துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான சட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகளுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதில் சிறைத்துறை உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவி... | Thisaigal News