Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

Share:

பகாங் மாநிலம் பெக்கான்னில், போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 10-ஆம் தேதி, பெக்கான் மாவட்ட சுகாதார அலுவலகம் அளித்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, 30 வயதுகளில் உள்ள மெக்கானிக், வாகனப் பணிமனை உரிமையாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஆகியோர் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சைதி மாட் ஜின் தெரிவித்துள்ளார்.

இந்த மூவரும் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனைச் செயல்பாட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கட்டணம் செலுத்தி அரசாங்க சுகாதார நிலையத்திலிருந்து போலி மருத்துவச் சான்றிதழ் பெற்றதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது | Thisaigal News