Jun 16, 2026
Thisaigal NewsYouTube
காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

நேற்று காஜாங்கிலுள்ள தாமான் செபகாட் இண்டா 2 அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்து நேற்று காலை சுமார் 7.10 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

அச்சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ அதிகாரி, அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளையில், குழந்தைகள் மற்றும் சிறார்களுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் வலியுறுத்தியுள்ளார்.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு