டிச. 11-
கிளந்தன், குவாங் மூசாங், புக்கிட் தம்புனில் குரோமியத்தன்மையிலான இரும்புத்தாதுப்பொருட்களை தோண்டும் சுரங்க நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு மலேசிய மண்ணில் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நச்சு அமிலத்தன்மையை கொண்ட குரோமித் தாதுப்பொருட்கள் ஆற்றில் கலந்தால் மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பைத் ஏற்படுத்தக்கூடியதாகும் என்று மீனாட்சி ராமன் எச்சரித்துள்ளார்.
ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய சுரங்க நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் இலாகா மற்றும் கிளந்தான் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு அந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், அறைகூவல் விடுத்துள்ளார்.








