Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்து முதியவர் மரணம்

Share:

பாலிங், பிப்.20-

வெட்டப்பட்ட மரம் ஒன்று, எதிர்பாராத விதமாக தன் மீது விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மதியம் 12.34 மணியளவில் கெடா, ஜாலான் பாலிங் – கிரிக் சாலையில் கம்போங் சாருக் ஜெர்னிவில் நிகழ்ந்தது.

இதில் 64 வயது முதியவர் ஒருவர், மரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

சக நண்பர்களுடன் மரத்தை வெட்டும் பணியின் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த மரம், முதியவர் மீது விழுந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இவ்விலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News