Mar 12, 2026
Thisaigal NewsYouTube
எல்லைப் பாதுகாப்பு: 'கை அசைக்கும்' கலாச்சாரத்திற்குத் தடை; குடிநுழைவுத் துறை கடும் எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

எல்லைப் பாதுகாப்பு: 'கை அசைக்கும்' கலாச்சாரத்திற்குத் தடை; குடிநுழைவுத் துறை கடும் எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

நாட்டின் எல்லை நுழைவாயில்களில் முறையான ஆவணச் சோதனையின்றி, வெறும் 'கை அசைப்பதன்' மூலம் வாகனங்களை அனுமதிக்கும் முறையற்ற கலாச்சாரத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். மலேசியா - தாய்லாந்து எல்லைச் சாவடிகளில் இத்தகைய விதிமீறல்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது போன்ற அற்பமான சமரசங்கள் நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், குற்றச் செயல்களுக்குப் பாதையாகவும் அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாகத் தங்களின் கடப்பிதழ் அல்லது எல்லை அனுமதி அட்டையைச் சோதனையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். குற்றச் சிண்டிகேட்டுகளுக்கும் வெளித்தரப்பு அழுத்தங்களுக்கும் பணியாமல் நேர்மையுடன் செயல்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ள அவர், பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை நேரடியாகத் துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!