May 4, 2026
Thisaigal NewsYouTube
கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை மீண்டும் பாதிப்பு: பயணிகள் அவதி
தற்போதைய செய்திகள்

கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை மீண்டும் பாதிப்பு: பயணிகள் அவதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.27-

கிளானா ஜெயா வழித்தட எல்ஆர்டி ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அந்த இலகு ரயில் சேவையை வழிநடத்தும் நிறுவனமான ரெபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

இன்று காலையில் கிளானா ஜெயா நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் ஒன்று சேவையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த சேவைகளிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ரயில்களின் வருகை இடைவெளியில் தற்காலிக மாற்றங்கள் இருக்கும். இது தானாகவே சரி செய்யப்படும் என ரெபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்காக ரெபிட் கேஎல் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News