Mar 13, 2026
Thisaigal NewsYouTube
38 PEDI மையங்கள் அடுத்த ஆண்டு செயல்படும் - துணை அமைச்சர் தியோ
தற்போதைய செய்திகள்

38 PEDI மையங்கள் அடுத்த ஆண்டு செயல்படும் - துணை அமைச்சர் தியோ

Share:

பினாங்கு மாநிலத்தில் 38 இலக்கவியல் பொருளாதார மையங்களை மேம்படுத்துவதற்கு தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு சுமார் 4 கோடியே 94 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் அறிவித்துள்ளார்.

PEDI என்று அழைக்கப்படும் இந்த 38 இலக்கவியல் பொருளாதார மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுவற்கான செலவினத்தையும் இந்த நிதி ஒதுக்கீடு உள்ளடக்கியிருப்பதாக தியோ நீ சிங் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கு மாநிலத்திற்கு மேற்கொண்டுள்ள அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக செமராக் கெமிலாங் @ புலாவ் அமன் டான் கோம்டிஸ் மாபோ எனும் நிகழ்வையொட்டி புலாவ் அமான் னில் ஓரிட மக்களை சந்திக்கும் நிகழ்வில் துணை அமைச்சர் தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.
PEDI இலக்கவியல் பொருளாதார மையங்கள் நிறுவப்படும் இடங்களில் ஒன்றாக புலாவ் அமான் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் இப்பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டோர் இதன் அனுகூலத்தை பெறுவர் என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளையில் புலாவ் அமான் னில் அமையவிருக்கும் புதிய PEDI மையம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

PEDI மையம் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் வெள்ளியை அரசாங்கம் செலவிடுகிறது. பினாங்கில் தற்போது 3 PEDI மையங்கள் செல்படுகின்றன. இரண்டு பாலிக் புலாவ் விலும், ஒன்று தாசெக் கெலுகோர் ரிலும் செயல்படுவதாக தியோ நீ சிங் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!