Dec 3, 2025
Thisaigal NewsYouTube
38 PEDI மையங்கள் அடுத்த ஆண்டு செயல்படும் - துணை அமைச்சர் தியோ
தற்போதைய செய்திகள்

38 PEDI மையங்கள் அடுத்த ஆண்டு செயல்படும் - துணை அமைச்சர் தியோ

Share:

பினாங்கு மாநிலத்தில் 38 இலக்கவியல் பொருளாதார மையங்களை மேம்படுத்துவதற்கு தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு சுமார் 4 கோடியே 94 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் அறிவித்துள்ளார்.

PEDI என்று அழைக்கப்படும் இந்த 38 இலக்கவியல் பொருளாதார மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுவற்கான செலவினத்தையும் இந்த நிதி ஒதுக்கீடு உள்ளடக்கியிருப்பதாக தியோ நீ சிங் குறிப்பிட்டுள்ளார்.

பினாங்கு மாநிலத்திற்கு மேற்கொண்டுள்ள அலுவல் பயணத்தின் ஒரு பகுதியாக செமராக் கெமிலாங் @ புலாவ் அமன் டான் கோம்டிஸ் மாபோ எனும் நிகழ்வையொட்டி புலாவ் அமான் னில் ஓரிட மக்களை சந்திக்கும் நிகழ்வில் துணை அமைச்சர் தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.
PEDI இலக்கவியல் பொருளாதார மையங்கள் நிறுவப்படும் இடங்களில் ஒன்றாக புலாவ் அமான் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் இப்பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்டோர் இதன் அனுகூலத்தை பெறுவர் என்று துணை அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளையில் புலாவ் அமான் னில் அமையவிருக்கும் புதிய PEDI மையம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

PEDI மையம் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் வெள்ளியை அரசாங்கம் செலவிடுகிறது. பினாங்கில் தற்போது 3 PEDI மையங்கள் செல்படுகின்றன. இரண்டு பாலிக் புலாவ் விலும், ஒன்று தாசெக் கெலுகோர் ரிலும் செயல்படுவதாக தியோ நீ சிங் தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி