May 6, 2026
Thisaigal NewsYouTube
உரிமம் இல்லாத மியான்மார் நாட்டவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!
தற்போதைய செய்திகள்

உரிமம் இல்லாத மியான்மார் நாட்டவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.14-

இன்று காலை கோலாலம்பூர், ஜாலான் இஸ்தானாவில் நடந்த கோரமான சாலை விபத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத மியான்மார் நாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெஸ்ராயா நெடுஞ்சாலையில் இருந்து நகர்ப்புற மையத்தை நோக்கி வந்த 44 வயதுடைய அந்த நபர், வலது புறம் பாதையை மாற்ற முயன்ற போது, அதே பாதையில் நேராகச் சென்ற மலேசிய ஆடவர் ஓட்டி வந்த கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

தலையிலும் உடலிலும் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கப் பிரிவுத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஸம்ஸுரி முகமட் இசா தெரிவித்தார். உயிரிழந்தவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் காவற்படை தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்