மஇகா தலைமையக புதிய கட்டட நிர்மாணிப்புப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமயச் சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இந்திய முஸ்லிம் சமயப் போதகர் ஒருவர், டோவா வாசித்தது தொடர்பில் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவான ஜாவி விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
அந்த இந்திய முஸ்லிம் சமயப் போதகரின் நடவடிக்கைகள் ஃபட்வா வை மீறிய செயலா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அந்த சமய இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சமயப் போதகர் , குற்றம் இழைத்து இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் 1997 ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேச ஷரியா குற்றவியல் சட்டம் 559 பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படும் ஜாவி அறிவித்துள்ளது.
இந்து அர்ச்சகர்கள் வேதமந்திரத்தை முழுங்கி கொண்டிருந்த வேளையில் அவர்களின் முன்னிலையில் அந்த சமயப் போதகர் டோவா வாசித்தது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஜாவி தெரிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


