மஇகா தலைமையக புதிய கட்டட நிர்மாணிப்புப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்து சமயச் சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் இந்திய முஸ்லிம் சமயப் போதகர் ஒருவர், டோவா வாசித்தது தொடர்பில் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவான ஜாவி விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
அந்த இந்திய முஸ்லிம் சமயப் போதகரின் நடவடிக்கைகள் ஃபட்வா வை மீறிய செயலா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அந்த சமய இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட சமயப் போதகர் , குற்றம் இழைத்து இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் 1997 ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேச ஷரியா குற்றவியல் சட்டம் 559 பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படும் ஜாவி அறிவித்துள்ளது.
இந்து அர்ச்சகர்கள் வேதமந்திரத்தை முழுங்கி கொண்டிருந்த வேளையில் அவர்களின் முன்னிலையில் அந்த சமயப் போதகர் டோவா வாசித்தது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஜாவி தெரிவித்துள்ளது.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


