May 24, 2026
Thisaigal NewsYouTube
49 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

49 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஜூலை 29-

சிலாங்கூர், காஜாங் உத்தாமா வட்டாரத்தில் சாலையில் அராஜகம் புரிந்த கேடிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 49 மோட்டார் சைக்கிள்களையும், ஒரு 4 drive வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு எதிராக பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 75 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

15 க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையை மோட்டார் சைக்கிளோட்டிகளில் பெரும்பாலானவர்களுக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லாது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

Related News