Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு
தற்போதைய செய்திகள்

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

Share:

நாட்டையே உலுக்கிய 'கேங் நிக்கி' பண மோசடிக் கும்பல் மற்றும் அதன் தலைவன் நிக்கி லியாவ் மீதான விசாரணை, தனது முப்பது ஆண்டுகாலப் போலீஸ் வாழ்க்கையில் மிகச் சிக்கலான, மிகப்பெரிய வேட்டையாகும் என்று பணி ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயூப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.

பணி ஓய்வுப்பெறுதற்கு முதல் நாள் அயூப் கான் வெளியிட்ட ' பெந்தாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை’ புத்தகத்தில் இந்த விவகாரத்தை ஒரு தனி அத்தியாயமாக எழுதி, பல அதிரடிப் பின்னணிகளைப் பகிர்ந்துள்ளார். வெறும் மூன்று ஆன்லைன் மோசடிப் புகார்களில் தொடங்கி, பின்னர் 45 சொகுசு அடுக்குமாடி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் பல மில்லியன் ரிங்கிட் பணமோசடி கட்டமைப்பை அம்பலப்படுத்தியது வரை பல சுவாரசியமான தகவல்களை அவர் விவரித்துள்ளார்.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது முதல், இந்த விவகாரத்தில் 10 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் என மொத்தம் 12 அமலாக்கத்துறை அதிகாரிகள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வரை, இந்த வழக்கு தனது நேர்மைக்குக் கிடைத்த மிகப்பெரிய சவால் என்றும் அயூப் கான் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நிக்கி லியாவ், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் பிகேஆர் சட்டையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அயோப் கானின் இந்தப் புத்தகம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. எனினும் லிக்கி லியாவ், பி.கே.ஆர் உறுப்பினர் அல்ல என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோ புசியா சல்லே விளக்கம் அளித்து இருந்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு