நிர்வாகச் முறைகேடு மற்றும் பேராசையால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த 'தாபோங் ஹாஜி' விவகாரம் தொடர்பாக, வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று மேபாங்க் நிறுவனத்தின் புதிய தலைமையகக் கட்டடத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தத் யாத்ரீகர் நிதி அமைப்பில் நடந்த முதலீட்டு மோசடிகள் மற்றும் கடுமையான நிர்வாகக் குறைபாடுகள் குறித்து இந்த அரச விசாரணை ஆணையம் விரிவாக ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"அதிகாரிகளின் அலட்சியம், பேராசை மற்றும் கட்டுப்பாடற்ற சுயநலப் போக்குகளால் இந்தத் தேசிய நிறுவனம் ஒரு கட்டத்தில் முற்றிலும் அழியும் நிலைக்குச் சென்றது. ஆனால், தற்போதைய கடுமையான சீர்திருத்தங்கள் மூலம் அது மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுச் சரியானப் பாதைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று பிரதமர் எச்சரித்தார்.
அரசியல் தலையீடுகளைக் கட்டுப்படுத்தவும், தடயவியல் தணிக்கை நடத்தவும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தச் சிறப்பு நாடாளுமன்ற அமர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








