புலாவ் டியோமன், ஜூலை 15-
இரண்டு LRT ரயில் பெட்டிகள் Tioman தீவின் கடலடியில் இறக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ரயில் பெட்டிகளையும் LRT ரயில் சேவையை வழிநடத்தும் பிரதான நிறுவனமான Prasarana Malaysia Berhad அன்பளிப்பு செய்துள்ளது.
மலேசியத் தலைநகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட LRT ரயில் சேவையின் கேலனா ஜெய- வழித்தடத்திற்கு பயன்படுத்தப்பட்ட முதலாவது ரயில் வண்டியின் இரண்டு பெட்டிகள்தான் கடலடியில் இறக்கப்பட்டுள்ளதாக Prasarana நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு LRT ரயில் பெட்டிகளின் சேவை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறுத்திக்கொள்ளப்பட்டன. 26 ஆண்டுகள் ஓடி உழைத்த நாட்டின் முதலாவது LRT ரயில் பெட்டிகளின் சேவையை நினைவுகூரும் வகையில் இவ்விரு பெட்டிகளும் தியோமான் தீவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
Rapit Rail நிறுவனத்தின் தொழில்நுட்பக்குழுவின் வழிகாட்டலுடன் அந்த இரண்டு ரயில் பெட்டிகளும் கேலனா ஜெய-வில் இருந்து பகாங், கோலா ரோம்பின், Tioman- க்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த இரண்டு ரயில் பெட்டிகளும் கடலடியில் இறக்கப்பட்டது மூலம் உயிரியல் பன்முகத்தன்மைக்கு ஆதரவு வழங்குவதோடு, கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கும் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும்.
குறிப்பாக, தியோமான் சுற்றுலாத்துறையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதுடன் எதிர்காலத்தில் கடல் வாழ் உயிரினங்களுக்கு இவை சரணாலயமாக விளங்கும் என்று Prasarana தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








