May 15, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில பள்ளிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநில பள்ளிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.15-

சிலாங்கூர் மாநில பள்ளிகளில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்று மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார். பள்ளி நேரங்களில் நடமாடும் போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பள்ளியுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீஸ் அதிகாரி மூலமாக பாதுகாப்புத் திட்டம் வலுப்படுத்தப்படும். இது பள்ளிகளில் பாதுகாப்பானச் சூழலை உறுதிச் செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாகும் என்று டத்தோ ஷாஸெலி கூறினார்.

இதன் தொடர்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாதுகாப்பு முறை செயல்படுத்தப்படும் டத்தோ ஷாஸெலி தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இண்டாம் படிவ மாணவன், 16 வயது மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.

Related News

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ