பெருநிறுவனங்களை கட்டாயமாகக் கைப்பற்ற முயன்றது, அதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகளைத் தொடர்பு படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தொழிலதிபர் விக்டர் சின் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
விக்டர் சின்-ஐக் கண்டுபிடிக்க வெளிநாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பணமோசடித் தடுப்பு, பயங்கரவாத நிதியளிப்புத் தடுப்பு மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகளின் வருவாய் சட்டமான அம்லா-வின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய பல அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








