ஜோகூர் மாநிலத்தின் சில பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டுள்ளதை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, டீசலானது தொடர்ந்து விநியோகிப்பட்டு வருவதாகத் தெரிவித்ததாக ஜொகூர் மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ குறிப்பிட்டுள்ளார்.
டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக தடங்கல் விரைவில் கட்டம் கட்டமாக சரிசெய்யப்படும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் லிலிஸ் சஸ்லிண்டா தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் பதற்றத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என்றும், விநியோகம் விரைவில் சீராகும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.








