Dec 30, 2025
Thisaigal NewsYouTube
சரவாக்கில் நாளை முதல் ஜனவரி 1 வரை தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் நாளை முதல் ஜனவரி 1 வரை தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.30-

சரவாக்கின் பல பகுதிகளில் நாளை டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில், இரண்டு நாட்களுக்குத் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

குறிப்பாக, கூச்சிங், செரியான், சமரஹான் ஶ்ரீ அமான் மற்றும் பெத்தோங் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் மெட்மலேசியா இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் தொடர் மழையைக் கருத்தில் கொண்டு, தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறும், வானிலை குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து அறிந்து கொள்ளுமாறும் மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

பிறை டோல் சாவடி சம்பவம்: கைது செய்யப்பட்ட தம்பதி கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்

பிறை டோல் சாவடி சம்பவம்: கைது செய்யப்பட்ட தம்பதி கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்

விமான டயர் வெடிப்பு: சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிக மூடல்

விமான டயர் வெடிப்பு: சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிக மூடல்

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது