இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மார்ச் 19, 20, 28, 29 ஆகிய நான்கு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டு 'ஓப்ஸ் ஹரி ராயா' சோதனையைத் தொடங்கியுள்ள சாலைப் போக்குவரத்துத் துறை, அதிவேகம், சமிக்ஞை விளக்கை மீறுதல் உள்ளிட்ட 9 முக்கிய போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், மார்ச் 18 முதல் கருப்புப் பட்டியலில் உள்ள எச்சரிக்கை அபராதங்களை 'MyJPJ' செயலி மூலமே செலுத்தி, தடையை உடனடியாக நீக்கிக்கொள்ளும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.

Related News

ஹார்முஸ் நீர்ச்சந்தி நெருக்கடி: நீண்டகால பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மலேசியா தயார்

WRP ஆசியா பசிபிக் நிறுவனம் மூடல்: 1,426 தொழிலாளர்களின் நலனை உறுதி செய்கிறது மனிதவள அமைச்சு

சிரம்பான் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற திருவாசக முற்றோதல்

சந்தேக நபர் மீது போலீஸ் அத்துமீறல்: அம்னெஸ்டி மலேசியா கண்டனம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: தள்ளிவைக்க அவசியமில்லை - முதலமைச்சர் ரவூப் யூசோப் அதிரடி


