இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மார்ச் 19, 20, 28, 29 ஆகிய நான்கு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டு 'ஓப்ஸ் ஹரி ராயா' சோதனையைத் தொடங்கியுள்ள சாலைப் போக்குவரத்துத் துறை, அதிவேகம், சமிக்ஞை விளக்கை மீறுதல் உள்ளிட்ட 9 முக்கிய போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், மார்ச் 18 முதல் கருப்புப் பட்டியலில் உள்ள எச்சரிக்கை அபராதங்களை 'MyJPJ' செயலி மூலமே செலுத்தி, தடையை உடனடியாக நீக்கிக்கொள்ளும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.

Related News

பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்

காவற்படை சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 வயது சிறுவன் விபத்தில் பலி

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த நபர் கைது

கோலாலம்பூர் சலோமா மேம்பால மின்தூக்கியில் சிக்கிய 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீட்பு


