இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மார்ச் 19, 20, 28, 29 ஆகிய நான்கு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டு 'ஓப்ஸ் ஹரி ராயா' சோதனையைத் தொடங்கியுள்ள சாலைப் போக்குவரத்துத் துறை, அதிவேகம், சமிக்ஞை விளக்கை மீறுதல் உள்ளிட்ட 9 முக்கிய போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், மார்ச் 18 முதல் கருப்புப் பட்டியலில் உள்ள எச்சரிக்கை அபராதங்களை 'MyJPJ' செயலி மூலமே செலுத்தி, தடையை உடனடியாக நீக்கிக்கொள்ளும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


