குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர் பயன்படுத்தும் பழைய மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய வாகனங்களை வாங்குவதற்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சு பரிசீலிக்கத் தயாராக உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தனியார் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் முதலில் முன்வர வேண்டும் என்றும், அரசு நிதி உதவியை மட்டுமே நம்பியிருக்காமல் அவர்களின் பங்களிப்பும் அவசியம் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். ஏற்கனவே கார்களுக்கு அமல்படுத்தப்பட்டது போன்ற ஒரு முறையைப் பின்பற்றுவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லேன் பாதைகளில் விபத்துகள் பதிவாகியுள்ளதால், அந்தப் பயன்பாடு குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை
Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


