குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினர் பயன்படுத்தும் பழைய மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய வாகனங்களை வாங்குவதற்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சு பரிசீலிக்கத் தயாராக உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தனியார் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் முதலில் முன்வர வேண்டும் என்றும், அரசு நிதி உதவியை மட்டுமே நம்பியிருக்காமல் அவர்களின் பங்களிப்பும் அவசியம் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். ஏற்கனவே கார்களுக்கு அமல்படுத்தப்பட்டது போன்ற ஒரு முறையைப் பின்பற்றுவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லேன் பாதைகளில் விபத்துகள் பதிவாகியுள்ளதால், அந்தப் பயன்பாடு குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை
Related News

ஹார்முஸ் நீர்ச்சந்தி நெருக்கடி: நீண்டகால பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மலேசியா தயார்

WRP ஆசியா பசிபிக் நிறுவனம் மூடல்: 1,426 தொழிலாளர்களின் நலனை உறுதி செய்கிறது மனிதவள அமைச்சு

சிரம்பான் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற திருவாசக முற்றோதல்

சந்தேக நபர் மீது போலீஸ் அத்துமீறல்: அம்னெஸ்டி மலேசியா கண்டனம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: தள்ளிவைக்க அவசியமில்லை - முதலமைச்சர் ரவூப் யூசோப் அதிரடி


