மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டால், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய எரிசக்தி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து மலேசியா ஆலோசிக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார். பெட்ரோனாஸ் நிறுவனம் தற்போது பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களில் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதித் தடை என்பது இறுதி நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும், தற்போதைய சூழலில் உலகளாவிய வர்த்தகப் பாதைகளின் நிலவரத்தை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று ஆதாரங்களைக் கண்டறிதல், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்
Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


