கம்பார், ஜாலான் பசார் அவாம்- இல் நேற்று இரவு காவற்படையினரின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவினரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 வயது சிறுவன், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளைச் சட்டத்திற்குப் புறம்பாக உருமாற்றம் செய்தது ஆகிய காரணங்களால் ஏற்பட்ட அச்சத்தில், காவற்படையினரின் உத்தரவை மீறி அதிவேகமாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கம்பார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார். மாம்பாங் டி அவான் பகுதியைச் சேர்ந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் காவற்படை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

நோன்புப் பெருநாள் - கனரக வாகனங்களுக்கு 4 நாட்கள் தடை ! ஜேபிஜே அதிரடி சோதனை

மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த நபர் கைது

கோலாலம்பூர் சலோமா மேம்பால மின்தூக்கியில் சிக்கிய 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீட்பு


