பஹாவ் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த 39 வயது வேலையற்ற நபர் ஒருவரை செம்போல் காவற்படை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் வேலி ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடியது தொடர்பான புகாரின் அடிப்படையில், தாமான் மசான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைப் பிடித்ததாக செம்போல் மாவட்டக் காவற்படைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் நோர்ஹிஷாம் முஸ்தபா தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பான குற்றப்பின்னணி கொண்ட அந்த நபரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட உள்ளாடை ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கோலா பிலா மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

பழைய மோட்டார் சைக்கிள்களைத் தள்ளுபடி செய்ய ஊக்கத்தொகை ! போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

நோன்புப் பெருநாள் - கனரக வாகனங்களுக்கு 4 நாட்கள் தடை ! ஜேபிஜே அதிரடி சோதனை

மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்

காவற்படை சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 வயது சிறுவன் விபத்தில் பலி

கோலாலம்பூர் சலோமா மேம்பால மின்தூக்கியில் சிக்கிய 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீட்பு


