பஹாவ் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த 39 வயது வேலையற்ற நபர் ஒருவரை செம்போல் காவற்படை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் வேலி ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடியது தொடர்பான புகாரின் அடிப்படையில், தாமான் மசான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைப் பிடித்ததாக செம்போல் மாவட்டக் காவற்படைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் நோர்ஹிஷாம் முஸ்தபா தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பான குற்றப்பின்னணி கொண்ட அந்த நபரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட உள்ளாடை ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கோலா பிலா மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

ஹார்முஸ் நீர்ச்சந்தி நெருக்கடி: நீண்டகால பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க மலேசியா தயார்

WRP ஆசியா பசிபிக் நிறுவனம் மூடல்: 1,426 தொழிலாளர்களின் நலனை உறுதி செய்கிறது மனிதவள அமைச்சு

சிரம்பான் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற திருவாசக முற்றோதல்

சந்தேக நபர் மீது போலீஸ் அத்துமீறல்: அம்னெஸ்டி மலேசியா கண்டனம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: தள்ளிவைக்க அவசியமில்லை - முதலமைச்சர் ரவூப் யூசோப் அதிரடி


