பஹாவ் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த 39 வயது வேலையற்ற நபர் ஒருவரை செம்போல் காவற்படை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் வேலி ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடியது தொடர்பான புகாரின் அடிப்படையில், தாமான் மசான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைப் பிடித்ததாக செம்போல் மாவட்டக் காவற்படைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் நோர்ஹிஷாம் முஸ்தபா தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பான குற்றப்பின்னணி கொண்ட அந்த நபரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட உள்ளாடை ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கோலா பிலா மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


