கோலாலம்பூர், ஜூலை 15-
அரியணை விழாவை முன்னிட்டு அன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் 14 பிரதான சாலைகள் மூடப்பட்டு இருக்கும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் அந்த 14 சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்துள்ளார்.
இஸ்தானா நெகாராவில் நடைபெறும் அரியணை விழாவில் பிரமுகர்கள் கலந்து கொள்வதற்கும், விழா சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் 14 சாலைகள் மூடப்பட்டு இருக்கும்.
Jalan Tun Razak, / Jalan Kia Peng, / Jalan Raja Chulan, / Jalan Ampang, / Jalan Sultan Ismail,/ Lebuhraya Sultan Iskandar, / Jalan Tuanku Abdul Halim, / Jalan Semantan, / Jalan Damansara, / Jalan Istana, /Kuala Lumpur – Seremban Expresway, / Jalan Kuching, / Dato Onn சாலை வட்டம், Jalan Parlimen / ஆகியவையே மூடப்படவிருக்கும் 14 முதன்மை சாலைகளாகும் என்று ருஸ்டி இசா குறிப்பிட்டுள்ளார்.








