Apr 27, 2026
Thisaigal NewsYouTube
சையத் சாடிக் விடுதலை: மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜூன் 30-இல்
தற்போதைய செய்திகள்

சையத் சாடிக் விடுதலை: மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜூன் 30-இல்

Share:

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசுத் தரப்பு செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஜூன் 30-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கவுள்ளது.

பெர்சத்து கட்சியின் 'அர்மடா' பிரிவு நிதியை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், முன்னதாக உயர் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்திருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் அவரை அந்தத் தண்டனையிலிருந்து விடுவித்தது.

தற்போது இந்த இறுதி மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அபு பக்கர் ஜாயிஸ் தலைமையிலான மூவர் அமர்வு விசாரித்து வருகிறது. வரும் ஜூன் ஆம் தேதி சையத் சாதிக் விடுதலை உறுதி செய்யப்படுமா அல்லது தண்டனை மாற்றப்படுமா என்பது தெரியவரும்.

Related News