கோலாலம்பூரில் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என டிஏபி கட்சி தெரிவித்துள்ள நிலையில், நச்சுத் தன்மை கொண்ட அந்தக் கருத்து வெளியிடப்படுவதை பிரதமர் அன்வார் இபுராகிம் கட்டுப்படுத்த வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியிடின் ஹாஸ்ஸான் குறிப்பிடுகயில், ஊராட்சி மன்ற சட்டம் 1976இன் கீழ், 50 ஆண்டுகளுக்கும் முன்னரே உள்ளாட்சித் தேர்தலை முந்தைய அரசாங்கங்கள் ஒழித்து விட்டன எனவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் ஊராட்சி மன்றங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதைத் தவிர்ப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தின் அந்த முடிவால், இனங்களுக்கு இடையே அமைதி சீர்குலைவது தவிர்க்கப்படும் என்றார்.








