May 15, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சாலைகள் 24 மணி நேரம் மூடப்படாது
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சாலைகள் 24 மணி நேரம் மூடப்படாது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

அடுத்த வாரம் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் போது கோலாலம்பூர் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் எந்தவொரு சாலையும் முழுமையாக மூடப்படாது என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று முடிந்ததும் கோலாலம்பூரில் உள்ள அனைத்து சாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டு விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகில் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பிரதான சாலைகள் முழுமையாக மூடப்படும் என்று கூறப்படுவது தொடர்பில் விளக்கம் அளிக்கையில் டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் காம்ப்ளெக்ஸ் பூங்கா ராயா பகுதி மற்றும் சுபாங் ஆகாயப்படைத் தளம் ஆகியவற்றை இணைக்கும் சாலைகள் மட்டும் வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையின் போது மூடப்பட்டு இருக்கும். மற்ற வேளைகளில் அவை முழுமையாக செயல்பாட்டில் இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்னோவில் இணைய விருப்பம் - அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்னோவில் இணைய விருப்பம் - அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சட்டத்தை எதிர்கொள்ள ஜோலோ மலேசியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் - அமைச்சர் பாஃமி ஃபாசில் கருத்து

சட்டத்தை எதிர்கொள்ள ஜோலோ மலேசியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் - அமைச்சர் பாஃமி ஃபாசில் கருத்து