Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இவ்வாண்டு பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்படும் - கல்வி அமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

இவ்வாண்டு பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்படும் - கல்வி அமைச்சு தகவல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

புதிய கல்வியாண்டில், குழந்தைகளுக்கான பாதுகாப்பான கற்றல் சூழலை உறுதி செய்வதற்காக, பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு தீவிரப்படுத்தும் என்று கல்வித்துறை பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் காசிம் தெரிவித்துள்ளார்.

பகடி வதை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு பாதுகாப்புப் பணிக் குழுவை அமைப்பது உட்பட, இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பள்ளிகளில் பகடி வதை சம்பவங்கள் நடந்தால், அவற்றைச் சமாளிக்க தாங்கள் சிறந்த முறையில் தயாராக இருப்பதாகவும் அமினுடின் காசிம் உறுதியளித்துள்ளார்.

அவற்றில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனை வழங்குதல் மற்றும் ஆரம்ப கால விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவையும் அடங்கும்.

மேலும் பள்ளி மாணவர்களிடையே ஒருவரையொருவர் பகடி வதை செய்து கொள்வதை தவிர்க்க, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சக மாணவர்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் உள்ள குரூப் ஏ பள்ளிகளில் நேற்று வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

நாடெங்கிலும், நேற்று முதல் எந்த ஒரு பகடி வதைச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும், அனைத்து பள்ளிகளிலும் சுமூகமான சூழ்நிலையே நிலவி வருவதாகவும் அமினுடின் காசிம் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்